நினைவலைகள் ...
தொடர்ச்சி ....1
வீட்டிலே வளர்த்த நாட்டுக்கோழி
ஞாயிற்றுக்கிழமைகளில் அதுதான்
எங்களுக்குச் சரியான தீனி......
இரவுநேர புரோட்டோக் கடைகளின்
இனிமையான சத்தம், இசையின்
வடிவமாய் வந்து எம்மைச் சேருமே...
இளைப்பாரவும், களைப்பாரவும்
எல்லாச் சூழ்நிலையும் வந்தெம்மைச்
சேர்ந்ததே!...
அந்தக் காட்சி வந்து,வந்து போகுதே.....
கம்பங்காடுகள் கண்ணுக்கெட்டும்
தூரம் பரந்து கிடக்க...
பூக்காடுகள் எங்கும் அழகாய்
காட்சியளிக்க....
திராட்சைத் தோட்டமோ
விரிந்திருக்க...
தக்காளிக் காட்டின் தனியழகும்,
பருத்திக் காட்டின் பரவசமும்
பார்க்கப் பார்க்க கொள்ளை கொள்ளுமே!
ரோஜாத்தொட்டமும், அதன் வேலியாய்
நொச்சிக் கூட்டமும்,...
நொச்சி இலையின் ஆவியும்,
பச்சைப் புல்வெளியும், ..எம்மை
பரவசமாக்கியதே.....
மொச்சைப் பயிரும், பச்சைப்பயிரும்
கச்சிதமாய் எமக்கு உணவானதே...
கரும்பை விளைவித்த எம்மக்கள்
கலங்காதிருந்தனரே.!
கரும்புப்பாகும், அதன் வெள்ளமும்
கட்டான உடம்பிற்குக் கட்டியம்
காட்டியதே.......
களங்கமில்ல மனம் படைத்த
எம் கண்ணியமிக்க கிராமமக்கள்
வெகுளியாய் வாழ்க்கை நடத்திய
வெகுஜனக் கூட்டம்.....பளிங்கு போல்
பாசங்காட்டும் பாசக்கூட்டம்.....
எம் கண்ணில் வந்து, வந்து போகுதே!...
நினைவுகள் தொடரும் ......
தொடர்ச்சி ....1
வீட்டிலே வளர்த்த நாட்டுக்கோழி
ஞாயிற்றுக்கிழமைகளில் அதுதான்
எங்களுக்குச் சரியான தீனி......
இரவுநேர புரோட்டோக் கடைகளின்
இனிமையான சத்தம், இசையின்
வடிவமாய் வந்து எம்மைச் சேருமே...
இளைப்பாரவும், களைப்பாரவும்
எல்லாச் சூழ்நிலையும் வந்தெம்மைச்
சேர்ந்ததே!...
அந்தக் காட்சி வந்து,வந்து போகுதே.....
கம்பங்காடுகள் கண்ணுக்கெட்டும்
தூரம் பரந்து கிடக்க...
பூக்காடுகள் எங்கும் அழகாய்
காட்சியளிக்க....
திராட்சைத் தோட்டமோ
விரிந்திருக்க...
தக்காளிக் காட்டின் தனியழகும்,
பருத்திக் காட்டின் பரவசமும்
பார்க்கப் பார்க்க கொள்ளை கொள்ளுமே!
ரோஜாத்தொட்டமும், அதன் வேலியாய்
நொச்சிக் கூட்டமும்,...
நொச்சி இலையின் ஆவியும்,
பச்சைப் புல்வெளியும், ..எம்மை
பரவசமாக்கியதே.....
மொச்சைப் பயிரும், பச்சைப்பயிரும்
கச்சிதமாய் எமக்கு உணவானதே...
கரும்பை விளைவித்த எம்மக்கள்
கலங்காதிருந்தனரே.!
கரும்புப்பாகும், அதன் வெள்ளமும்
கட்டான உடம்பிற்குக் கட்டியம்
காட்டியதே.......
களங்கமில்ல மனம் படைத்த
எம் கண்ணியமிக்க கிராமமக்கள்
வெகுளியாய் வாழ்க்கை நடத்திய
வெகுஜனக் கூட்டம்.....பளிங்கு போல்
பாசங்காட்டும் பாசக்கூட்டம்.....
எம் கண்ணில் வந்து, வந்து போகுதே!...
நினைவுகள் தொடரும் ......