Sunday, September 20, 2015

kavithai

தாய் .......

கணிப்பொறியும் போடமுடியாத கணிதம் நீ....
ஏவுகணையும் தாக்க முடியாத நெஞ்சுரம் நீ....
கடலின் ஆழமும்,பூமியின் பொறுமையும் நீ...
அற்புதங்கள் அனைத்தையும் பெற்ற சீமாட்டி நீ..
குறையே பார்க்காத கோமகள் நீ...
நிறைவுதான் நின் சொத்து...

பகுத்துப்பார்க்காமல் எதையும் விட்டதில்லை..
வகுத்துத் தந்தோர் வழியில் நெறிபிறழாமல்
தொகுத்தறிந்து தொடுவானம் தொட்டவள் நீ..
அறநெறி பிறழாமல் செயல்நெறி காட்டும்
நிகரில்லா செந்தமிழ்செல்வி நீ...

அனைவரையும் அரவணைக்கும் ஆழவிருட்சம் நீ..
சாஸ்திரமும் சொல்லாததை உன் புன்னகையே
சொல்லிவிடும் எமக்கு...
கல்வி பல கற்காவிட்டாலும் -உன்
கருத்தியல்  கல்வியாளர்களையும் கலங்கடித்து விடுமே..

மேதினியில் உள்ளோர் எல்லாம்
நீதிமானாக (நீதிநூல் வழி) நடத்தல்
நலம் பயக்கும் என்றுரைக்கும் 
மானுடப்பெருமாட்டியே.-- நின்னை
எழுதுவதென்றால் என் சிந்தை குளுருகின்றதே....

தோல்வியையே வேள்வியிலிட்டுகொளுத்தும் பெருமகளே..
கவலையை மகிழ்ச்சியாக்கி --
சீரிய எண்ணங்களின் சிந்தனைப் போக்கை
நாகரீக மனிதனும் நடைமுறைப் படுத்தி
வாழ்க்கைப் பயணத்தில் புதிய அத்தியாயம் படைக்க
நீ போதித்த பொற்சிந்தனை போதுமம்மா..

ப.அருணகிரி
கோயம்புத்தூர்

No comments:

Post a Comment